வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கியது கந்துரட்ட அணி..!

341

cricketஇலங்கை மாகாண மட்ட இருபது – 20 தொடரில் கந்துரட்ட மரூன்ஸ் அணி வெற்றிபெற்று சம்பியன்ஸ் பட்டத்தை வென்றுள்ளது.

பஸ்நாஹிர கிறீன்ஸ் அணியுடன் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மெத்திவ்ஸ் தலைமையிலான பஸ்நாஹிர அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலளித்த குமார் சங்கக்கார தலைமையிலான கந்துரட்ட மரூன்ஸ் அணி 17 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்று சம்பியனானது.

இதன் மூலம் அடுத்த மாதம் இந்தியாவில் ஆரம்பிக்கவுள்ள சம்பியன்ஸ் லீக் டுவென்டி டுவென்டி தொடரின் தகுதிகாண் போட்டிகளில் கந்துரட்ட அணி கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.