வவுனியா நெடுங்கேணி ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை (11.06.2016) அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்ற போது காணாமல் போயுள்ளார்.
இவ் யுவதி தொடர்பாக நெடுங்கேணி பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இவ் யுவதியை யாராவது கண்டால் அல்லது தகவல் தெரிந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கி ஒத்துழைப்பு வழங்குமாறு உறவினர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.






