வவுனியா நகரசபைக்குட்பட்ட பகுதிகளில் நகரசபையினர் குப்பைகளை அகற்றுவது வழமையாக நடைபெற்று வருகின்றது. எனினும் இவற்றில் பல்வேறு குறைபாடுகள் நிலவுவதாகவும் வவுனியாவின் பல பகுதிகளில் சரியான முறையில் குப்பைகள் நகரசபையினரால் அகற்றப்படுவதில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
வவுனியா குடுமன்காடு பிள்ளையார் கோவிலை அண்மித்த பகுதியில் கடந்த 4 வாரங்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை எனவும், இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிள்ளையார் கோவிலில் திருவிழா நடைபெற்றுவரும் இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறு குப்பைகளை அகற்றாது இருப்பதனால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்கொடுப்பதாகவும் உரிய அதிகாரிகள் இவ் விடயத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.