சிறைக்காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய கைதி..!

601

prisonநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் காந்தி (31). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தப்பினார்.

இது தொடர்பாக கே.கே. நகர் பொலிசார் 6 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். சிறை தலைமைக்காவலர் மணி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நேற்று திருவாரூர் நகரையொட் டிய பகுதியில் சிறை தலைமைக்காவலர் மணி உள்ளிட்ட 2 பேர் கைதி காந்தியை பிடிக்க முயன்றனர்.

அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. திடீரென தலைமைக்காவலர் மணியின் இடது கை கட்டை விரலை கடித்து காந்தி துப்பினார்.

இதனால் மணிக்கு ரத்தம் பீறி ட்டது. வலியை பொறுத்துக்கொண்டு கைதியை பிடித்து திருவாரூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

விரலை இழந்த காவலர்துண்டான விரலுடன் சிகிச்சைக்காக திருவாரூர் அரசுவைத்தியசாலைக்கு மணி சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இருந்தாலும் துண்டான விரலை ஒட்ட வைக்க வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறி விட்டதாக தெரிகிறது.