ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாண கருக் மாவட்ட கட்டுமான முகாமில் தூங்கிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது நேற்று அதிகாலை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
நவீன ஆயுதங்கள் மற்று ரொக்கெட் மூலம் வீசப்பட்ட கையெறிக்குண்டுகள் கொண்டு தாக்கியதில் ஒரு பொலிசார் உள்பட 10பேர் கொல்லப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஆப்கன் – ஜெர்மன் இணைந்து நடத்திய சாலை கட்டுமான நிறுவனத்தின் பணியாளர்கள் ஆவர்.
போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாலையோரக்குண்டு வெடிப்பு, தற்கொலைப்படை தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் வெளியேற உள்ள நிலையில் அப்பகுதிகளை கைப்பற்றும் நோக்கில் இதுபோன்ற தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.





