கைவிடப்பட்ட இலங்கைப் படகு தமிழகத்தில் கண்டுபிடிப்பு..!

1003

boat17 அடி நீளமான சந்தேகத்துக்குரிய இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்று தமிழகம் நாகப்பட்டிணம் கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய்யால் இயங்கும் இந்தப்படகை மீனவர்கள் கண்டு கரையோர காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.

எனினும் இது மீன்பிடிப்படகு என்பதற்கான ஆதாரங்களை காணமுடியவில்லை என்று தெரிவிக்கப்படடுள்ளது. இந்த படகில் இருந்து தீக்குச்சிகள் மற்றும் துடைப்பு துணிகள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

வேதாரணியம் பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.