வவுனியா தோணிக்கல் ஜீனியஸ் முன்பள்ளியின் கண்காட்சி நிகழ்வு நேற்று (15.06.2016) பாலர் பாடசாலையின் தலைமை ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது.
இன்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் சிறப்பு விருந்தினராக பண்டாரிகுளம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், அயல் முன்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.



























