கவர்ச்சியான கண்களுக்கு அழகு குறிப்பு..!

504


eyesஇன்றைய காலத்தில் மேக்கப் இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது. கண்களுக்கு செய்யும் மேக்கப் சரியில்லையெனில், அந்த மேக்-கப்பே வீணாகிவிடும். ஏனெனில் மேக்-கப்பில் கண்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கண்களுக்கு செய்யும் மேக்கப்பால் கண்கள் நன்கு மென்மையாக அழகாகக் தெரிவதற்கு சில எளிய டிப்ஸ் இதே:

* கண் இமைகளை நன்கு அடர்த்தியாக வெளிப்படுத்துவதற்கு, கருப்பு நிற மஸ்காராவை பயன்படுத்துவது நல்லது. சிங்கிள் கோட் போதாமல் இருந்தால், டபுள் கோட் வேண்டுமானாலும் கொடுக்கலாம். மஸ்காராவை அளவுக்கு அதிகமாகவும் கொடுக்கக்கூடாது. ஏனெனில் அது கலைந்து, அசிங்கமான தோற்றத்தை தரும். எனவே மஸ்காரா அதிகமாகிவிட்டது போல் தெரிந்தால், லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து, சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம்.



* பின்பு கண்களின் இமைகளுக்கு மேல் இருக்கும் பகுதியை காஜலை வைத்து, அடர்த்தியான கோடு வரைய வேண்டும். அதிலும் அந்த கோடு மூக்கின் பக்கத்திலிருந்து போடும் போது மெல்லியதாகவும், போக போக அடர்த்தியாகவும் இருக்க வேண்டும்.

* கண்களுக்கு போடும் ஐ-லைனர் பென்சிலாக இருப்பது நல்லது.



* மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர் ப்ரௌன் அல்லது காப்பி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால் மேல் இமைகளுக்கு மேலே போடப்பட்டுள்ள காஜல் சற்று அழகாக வெளிப்படும்.



* பிஸ்கட் அல்லது லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவது நல்லது. முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.


– மேலே சொன்ன சில மேக்கப் டிப்ஸ்களை மனதில் கொண்டு, மேக்கப் செய்து வந்தால், கவர்ச்சிகரமாக பார்க்க மிகவும் அழகாகவும் இருக்கும்.