வவுனியா நெளுக்கும் பகுதியில் இன்று (18.06.2016) மதியம் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
நெளுக்குளம் பகுதியிலிருந்து சென்றுகொண்டிருந்த மகேந்திரா வான் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை மோதியத்தள்ளியதில் தூக்கி வீசப்பட்ட குடும்பப் பெண் படுகாயமடைந்ததுடன் செலுத்தி வந்த ஸ்கூட்டி மகேந்திரா வாகனத்திற்குள் அகப்பட்டு லக்சபான மின் கம்பத்துடன் மோதி நின்றுள்ளது.
மகேந்திரா வாகனம் கட்டுப்பாட்டை இழந்தே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்த நாதன் வனஜா என்ற 35 வயது குடும்பப் பெண் சுயநினைவற்ற நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது. இவர் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.






