வவுனியா நெளுக்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி பலி!!(இரண்டாம் இணைப்பு)

1081

Nelukkulam Accident

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நேற்று (18.06.2016) இடம்பெற்ற விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தாய் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

படுகாயமடைந்த நாதன் வனஜா என்ற 35 வயது குடும்பப்பெண் சுயநினைவு அற்ற நிலையில் இருந்துள்ள போதும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

நெளுக்குளம் பகுதியிலிருந்து சென்று கொண்டிருந்த மகேந்திரா வாகனம் முன்னால் சென்று கொண்டிருந்த ஸ்கூட்டியை தூக்கி எறிந்ததில் குடும்பப்பெண் படுகாயமடைந்ததுடன் ஸ்கூட்டி, மகேந்திரா வாகனத்துக்குள் அகப்பட்டு மின் கம்பத்துடன் மோதியே நின்றுள்ளது.

இவ் விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.