வவுனியா கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலையின் பராமரிப்பு ஆரம்பவிழா!!

512

 
கூமாங்குளம் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறி பாடசாலையின் கற்றல் உபகரணங்கள் வழங்குதலும் பராமரிப்பு ஆரம்பவிழாவும் நேற்றைய தினம் (19.06.2016) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதற்கான பாராமரிப்பு நிதி அனுசரணையை லண்டனைச் சேர்ந்த திருமதி சிற்றம்பலம் அன்னம்மா அறக்கட்டளை மேற்கொண்டிருந்தது.

இந் நிகழ்வில் திருகோணமலை ஓய்வு பெற்ற சாரணர் பாசறை ஆணையாளர் ராஜரஞ்சன் இராஜரட்னம் அவர்கள் பிரதம விருந்தினராகவும் அஸ்திரம் மக்கள் நற்பணி மன்றத் தலைவர் S.P.சுதர்சன், கூமாங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர். புஸ்பராஜா, சித்தி விநாயகர் ஆலயத் தலைவர் ந.ஆறுமுகம், R.D.S. செயலாளர் மா.சுரேந்திரன், ஆகியோரும் பாடசாலை மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

இச் செயற்றிட்ட ஏற்பாடுகளை The Compassisan charity LK அமைப்பு மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

DSC_0952 DSC_0958 DSC_0960 DSC_0961 DSC_0962 DSC_0965 DSC_0981 DSC_0984 DSC_0985 DSC_0987 DSC_1015 DSC_1019