வவுனியா மாவட்ட இணைய ஊடக அமைப்பு நேற்று 21.06.2016 மாலை குடியிருப்பு சிறுவர் பூங்காவில் இணைய ஊடக உறுப்பினர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட இணையங்களை ஒன்றினைத்து ஊடகவியலாளர்களை ஒழுக்க ரீதியிலும் அவர்களுக்கான பயிற்சி நெறிகளையும் பெற்று திறமையான ஊடகவியலார்களாக உருவாக்குவதற்கான முதற்படியே இணைய ஊடக அமைப்பு உருவாக்கப்பட்டது.
தலைவராக ந.ஜனகன், செயலாளராக ஜே.அருள், பொருளாலராக செல்வி க.தனுசினி, உப தலைவராக ப.கார்த்திக், உப செயலாளராக திருமதி சி. திவ்வியா, இணைய ஊடக உறுப்பினரால் தெரிவு செய்து வைக்கப்பட்தையடுத்து நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு செய்து வைக்கப்பட்டனர்.
திரு.கதீசன், திரு.வினோத், திரு.லதீப், திரு.தர்சன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படதையடுத்து
ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக ப.கனேசியஸ், திரு.மாணிக்கம் ஜெகன், திரு.பிரகாஷ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து தொழிநுட்ப உறுப்பினர்களாக
திரு.பிரதீப், திரு.நிதுஷன் ஆகியோர் இணைய ஊடகவியலாளர்களால் தெரிவு செய்யப்பட்டனர்.
இதனையடுத்து தலைவரால் ஒழுக்க விதிமுறைகள், யாப்பு விதி முறைகள் நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் இணைய ஊடக அமைப்பு உருவாக்கம் தொடர்பாகவும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
அடுத்த கூட்டத்தில் விடுபட்ட இணைய ஊடகவியலாளர்களையும் இணைத்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன் இன்றைய இணைய ஊடக அமைப்பில் கலந்து கொண்டவர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தலைவரின் உரையுடன் நிறைவு பெற்றது.
ஊடகப்பிரிவு
இணைய ஊடகவியலாளர் அமைப்பு
வவுனியா மாவட்டம்








