வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுதலை!!

622

IMG_1577

வவுனியாவில் இனந்தெரியாதவர்களினால் நேற்று செவ்வாய்க்கிழமை (21.06.2016) இரவு கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் இன்று மதியம் 2 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

விடுவிக்கப்பட்ட வர்த்தகர் தற்போது பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் வெளியே வந்தபின்னரே யாரால் எதற்க்காக கடத்தப்பட்டார் என்ற விபரங்கள் தெரியவரும் என்றும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சண்முகம் செல்வராஜா என்ற 55 வயதுடைய வர்த்தகரே, தனது வர்த்தக நிலையத்தில் இருந்து இரவு சுமார் 7 மணியளவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது வீட்டு வாசலில் வைத்து கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

தொடர்ந்து முழுமையான செய்திகளுக்கு வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.