கிளிநொச்சியில் விபத்து – இருவர் காயம்..!

522

ACCIDENT_logoகிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தொன்றில் இருவர் காயமடைந்துள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7.30 மணியளவில் ஏ9 வீதியிலிருந்து திருநகா் நோக்கி செல்லும் வழியில் மோட்டார் சைக்கிளும் டிப்பா் ரக வாகனமும் மோதியமையினால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த இருவரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனத் தெரியவருகிறது. இவ்விருவரும் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.