உலகை உலுக்கும் இரண்டாம் உலகப்போரில் உக்ரேனில் படுகொலைகள் அரங்கேறிய கிட்லரின் கொலைக்களம் கண்டுபிடிப்பு !(அதிர்ச்சி படங்கள் )

761

இரண்டாம் உலகப்போரின் போது, உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஹிட்லரின் நாசி கட்சியினர், அங்கு யூத மக்களை வதைத்து கொன்று குவியல் குவியலாக புதைத்துள்ளனர்.இது உக்ரைன் ஆட்சியாளர்களால் மறைத்து மவுனம் காக்கப்பட்டு வந்தது. இப்போது ஒரு பிரஞ்சு கத்தோலிக்க பாதிரியார் ஆய்வு முயற்சியால், அந்த உண்மைகள் உடைத்துக்கொண்டு ஆதாரங்களோடு வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

தற்போது உக்ரைனும் ஒப்புக்கொண்டு வெளியிட்டுள்ளது.

ஜேர்மனில் ஹிட்லரின் தலைமையிலான நாசிகளின் ஆட்சி அட்டூழிய நடந்தது. யூத இனத்தையும், ஜேர்மன் அல்லாதவர்களையும் முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் என 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வதை முகாமில் விஷவாயு செலுத்தி கொல்லப்பட்டனர்.

இதற்காக உலகம் வருந்துவது யாவரும் அறிந்ததே.

அதேசமயத்தில்தான், உக்ரைனிலும் நாசிகளின் ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் இருந்துள்ளது. தொழிற்சாலை முறை அளவில், 16 லட்சம் மக்களை அங்கு கொன்று குவித்துள்ளனர்.

யூதர்களை அல்லாமல் 3 மில்லியன் வேற்றினத்தவரையும் கொன்றுள்ளனர்.

பொது இடங்களிலே ரத்தம் சொட்டசொட்ட அடித்து தலை, கை, கால்களை உடைத்து கொன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பெண்களை நிர்வாணப்படுத்தி, பிறகு வழக்கமான வதைக்கு உள்ளாக்கி கொன்று, ஒரு இடத்தில் பிணங்களை நூற்றுக்கணக்கில் சேகரித்து, அதன்பிறகு பெரிய பள்ளம் தோண்டி மொத்தமாக புதைத்துள்ளனர்.

அப்படி புதைத்த பின்பும் ரத்தம் மண்ணிலே கசிந்து வெளியாகிக் கொண்டிருக்குமாம், அது புதைகுழிக்குள் இன்னும் பலர் உயிரோடு இருப்பதற்கான சாட்சி.

இதுபோல, 2000 பெரும்பள்ள சுடுகாடுகளில், 1.6 மில்லியன் மக்கள் புதைக்கப்பட்டனர். அன்றைய உக்ரைன் ஆட்சியாளர்களால் தன் நாட்டு மக்களை பாதுகாக்கும் துணிவில்லாது போன வெட்கக்கேட்டுக்காக அதை மறைத்து மவுனம் காத்து வந்தனர்.

இப்போது, இன்றைய தலைமுறையினர் பார்த்தாலே பகீரென அதிர்ந்து நெஞ்சுவெடிக்கும் படியான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

உக்ரைன் மக்களுக்கு மட்டுமல்ல ஒரு மனித கரிசனத்தோடு யார் பார்த்தாலுமே ரத்தம் உறையும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன.

ராவா ருஷ்கா யூதர்களை வேலை முகாமுக்கு அனுப்பியிருப்பதாக ஜேர்மனியர்கள் சொல்லி ஏமாற்றி, போரோவில் உள்ள காடுகளில் அவர்களை தூக்கிலிட்டு கொன்றனர்.

டிக்கான் லெஸ்சுக் என்ற 89 வயது முதியவர், தனது பாதிரியாரான தந்தை ஒரு யூத பெண்ணை, உக்ரைனில் நாசிகளின் ஆக்கிரமிப்பு இருந்த காலம் முழுவதும் தங்கள் வீட்டில் மறைத்து வைத்திருக்க பட்டபாட்டையும் இப்போது நினைவு கூர்ந்து வெளியிட்டிருக்கிறார்.

மனநோய் தனமானது நாசிகளின் ஆட்சி என்றாலும், அரசன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே என்ற பழமொழிக்கு ஏற்ப, ஹிட்லரே முழுமுதற் காரணம்.

இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா எல்லாம் ஒருங்கிணைந்து ஜேர்மன் அணியை வீழ்த்தியது. பிடிபடப்போகும் சூழலில் ஹிட்லர் துப்பாக்கியால் தற்கொலை செய்துகொண்டார்.

ஹிட்லருக்கு அது தண்டனையாக அமைந்தாலும் ஜேர்மனிலும், உக்ரைனிலும் ஏறத்தாழ 20 லட்சம் மக்கள் கொல்லப்பட காரணமாக இருந்துள்ளார்.

இத்தனைக்கும் இறந்தவர்கள் தங்கள் இனத்தில் பிறந்தது உட்பட, ஒரு தவறும் செய்யவில்லை என்பதுதான் பரிதாபம்.

ஆட்சியாளர்கள் மக்கள் பிரதிநிதிகளாக மட்டுமல்லாமல் கடவுளின் பிரதிநிதிகளாகவும் விளங்குகிறார்கள். ஆனாலும், சமயங்களில் ஹிட்லர், இடியமின், ராஜபக்ச போன்ற சைத்தானின் பிரதிநிதிகளும் ஆட்சிக்கு வந்துவிடுகின்றனர்.

சில ஆட்சியாளர்களுடைய இன அழிப்புதான் தீவிரவாதிகள் அழிப்பதைவிடவும், அரசு ஆதரவோடு பேரளவில் நடந்துவிடுகிறது.

மற்ற நாடுகள் எட்டிப் பார்ப்பதற்க்குள் பாதி ஜனத்தொகையையே பரலோகம் அனுப்பிவிடுகின்றனர்.

ஹிட்லர் ஆட்சியில் கொள்கை பரப்பும் முக்கிய பொறுப்பில் இருந்த கோயாபல்ஸ் என்பவர், யூதர்கள் விஷக் கிருமிகள், முதியவர்கள் நாட்டுக்கு வீண் இவர்களை அழித்துவிட்டால் நாடு செழிக்கும் என்று, சாதுரியமான பிரச்சாரத்தால் நம்பவைத்தார்.

அதனால்தான் இவ்வளவு கொலைகளையும் குற்றவுணர்வு இல்லாமலேயே செய்தனர்.

இப்போதும் மக்களை முட்டாளாக்கும் சில அரசியல்வாதிகளின் பேச்சுகள் கோயபல்ஸ் பிரச்சாரம் என்று கேலி செய்யப்படுகிறது.

ஹிட்லர் பிரளயத்துக்குப் பிறகு இனி இதுபோல எந்த நாட்டிலும் நடக்கவிடக் கூடாது என உலக நாடுகள் உஷாரானது.

எல்லாம் நடப்பது இறைவனால் என்றால். அழித்த ஆட்சியாளர்களும் ஒரு பொம்மைதான். அவர்கள் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பது உண்மைதான்.

ukrane_002 ukrane_003 ukrane_004 ukrane_005 ukrane_007 ukrane_008 ukrane_009 ukrane_010 ukrane_012