இந்தியாவில் பேய் போன்ற உருவம் ஒன்று சாலையை கடந்து செல்லும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்து சம்பவம் தலைநகர் டெல்லி சாலையில் இருந்த சிசிடிவி கெமராவில் ஒன்றில் பதிவாகியுள்ளது.
குறித்த வீடியோவில், டெல்லியில் உள்ள ஒரு சாலையில், அதிகாலை 2.11 மணி அளவில் ஒரு கருப்பு உருவம் நடந்து செல்கிறது.அப்போது அந்த சாலை வழியாக செல்லும் லாரி, கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் வாகனங்கள் அந்த உருவத்தின் மீது மோதுகிறது. ஆனால், அந்த உருவத்திற்கு ஏதும் ஆகவில்லை. அதன்பின்னும் அந்த உருவம் தொடர்ந்து நடக்கிறது.
ஏதுவும் ஆகாமல் நடந்து செல்லும் உருவம் திடீரென மறைந்து விடுகிறது. குறித்த நிகழ்வு இணையத்தில் வெளியாகி பீதியை ஏற்படுத்தியுள்ளது.