ஒக்டோபர் மாத ராசி பலன்கள் – கன்னி!!

864

kanni

எப்பொழுதும் சுறுசுறுப்புடன் காணப்படும் நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பின்னரே செய்வீர்கள். இந்த மாதம் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். திடீர் பணத் தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் பிரச்சனை ஏற்படலாம். எனவே கவனமாகப் பேசுவது நல்லது. முயற்சிகளில் தடை உண்டாகலாம். பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சிகளில் மனம் செல்லாமல் ஏதாவது கவலை இருக்கும். பத்தில் இருக்கும் குருவால் தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும்.

உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்னைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தன ஸ்தானத்திலுள்ள சனியால் காரியங்களில் தடை, தாமதம் உண்டாகலாம்.

அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்புகளையும் ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சலோடு மன சங்கடமும் இருக்கும். எதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண்பகை வராமலும், உடல் ஆரோக்யம் கெடாமலும் பார்த்துக் கொள்வது நல்லது.

எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். பணவரத்து திருப்திகரமாக இருப்பதுடன் செல்வாக்கும் உயரும். தாய், தந்தையின் உடல் நிலையில் கவனம் தேவை. நல்ல பலன்கள் கிடைத்தாலும் அதேநேரத்தில் விழிப்புடன் செயல்படுவதும் நன்மை தரும்.

பெண்களுக்கு இந்த மாதம் இழுபறியாக இருந்தாலும் சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது. வாகனங்களை ஓட்டிச் செல்லும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு அனைத்து விதமான நிலைகளிலும் நன்மைகளைப் பெறுவார்கள். எதிர்பார்த்திருந்த வாய்ப்புகள் வந்து சேரும்.

பரிகாரம் : ரங்கநாதரை தரிசிப்பதால் சிக்கலான பிரச்னைகள் தீரும். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

சந்திராஷ்டமம் : 19, 20, 21 ஆகிய திகதிகளில் புதிய ஒப்பந்தங்களை தவிர்த்து விடுங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீ மதுசூதனாய நமஹ” என்ற மந்திரத்தை 23 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : விநாயகப் பெருமானுக்கு தேங்காய் மாலை சார்த்தி அர்ச்சனை செய்து வழிபடுங்கள். தடை பட்ட காரியங்களில் இருந்த தடை நீங்கும். செல்வம் சேரும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், புதன், வியாழன்.
தேய்பிறை  : திங்கள், புதன்.