
அஞ்சல் தினத்தை முன்னிட்டு வவுனியா மாவட்ட அரச திணைக்களங்களுக்கு இடையே அஞ்சல் திணைக்களம் நடத்திய 9 பேர் பங்கு கொள்ளும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டித் தொடரின் இறுதியாட்டத்தில் வவுனியா கல்வித் திணைக்கள அணி வெற்றி பெற்றுச் சம்பியன் ஆனது.
வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் வவுனியா மாவட்ட போக்குவரத்துச் சபை அணியை எதிர்த்து வவுனியா கல்வித் திணைக்கள அணி மோதிக் கொண்டது.
இதில் வவுனியா கல்வித் திணைக் கள அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுச் சம்பியனானது.இறுதியாட்டத்தில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அஞ்சல் அதிபர் குகதாசன் கலந்து கொண்டார்.





