இரவில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் உடல் கருகி இறந்த பரிதாபம்!!

490

 

பெங்களூருவில் மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு பெண் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவில் கைலாஷ் எனும் மதுபான விடுதியில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, அச்சமயம் அங்கு தூங்கிக்கொண்டிருந்த ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்களில் பெண் ஒருவரும் இறந்துள்ளார், தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், பலமணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து இறந்தவர்களின் உடல், உடற்கூறுகள் ஆகியவை ஆய்வுக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதுவரை தீப்பற்றியதற்கான காரணம் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.