வவுனியாவில் 2007ல் மீட்கப்பட்ட லொறியில் இருந்து 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்பு!!

418

c4வவுனியாவில் 2007ம் ஆண்டு மீட்கப்பட்ட லொறி ஒன்றில் இருந்து சுமார் 6 வருடங்களின் பின் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வவுனியா பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த லொறி ஒன்று 2007ம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டது.

வவுனியா பிரதேச இராணுவ முகாம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த குறித்த லொறியில் சூட்சமமாக வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதென பயங்கரவாத தடுப்பு பிரிவினருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து நேற்று குறித்த லொறி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அதில் இருந்து C-4 ரக வெடி பொருள் 13.5 கிலோ கிராமும் 36 டெட்டனெட்டர்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது குறித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.