வவுனியா புதூர் பகுதில் கொள்ளை சம்பவம் – குடும்பப்பெண்மீது வாள் வெட்டு..!

489

rebவவுனியா புளியங்குள பொலிஸ் பிரிவிக்குட்பட்ட புதூர் சந்திப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் திருட்டு சம்பவம் ஒன்று 12.11.2013 இரவு 11.40 மணியளவில் நிகழ்ந்துள்ளது

சின்னதம்பி தவராசா வயது 63 தவராசா பத்மாவதி வயது 51 எனற இரண்டு நபர்களும் வசித்து வந்த வீட்டில் இனம் தெரியாதவாறு முகமூடி அணிந்து, நடந்து வந்த மூன்று நபர்கள் இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்கள் தம்பிராசாவின் அரை பவுண் தானாக மோதிரத்தையும் ஆயிரம் ரூபா பணத்தையும் ஒரு கையடக்க தொலைபேசியையும் திருடிவிட்டு தவராசாவை வாளால் வெட்டபோனவேளை மனைவி தடுத்துள்ளார் அந்தசமயம் பத்மாவதி கை வாள்வெட்டுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக வவுனியா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவர்களின் பிள்ளைகள் தட்சாயினி மற்றும் சித்தார்த்தன் இருவரும் அவுஸ்ரேலியாவில் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.