வவுனியாவில் பாடசாலை மாணவர்களுக்காக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்!!

796

 

வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

வவுனியா விபுலானந்தா கல்லூரிக்கு விளையாட்டு மைதானம் ஒன்றை பெற்றுத்தருமாறு கோரி பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (22.01.2019) முன்னெடுத்தனர்.

விபுலானந்தா கல்லூரியின் அதிபர் பி.சிவநாதன் தலைமையில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில், கல்லூரி வளாகத்திலிருந்து வீதிக்கு வந்த பெற்றார்கள் சிலமணிநேரம் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

கல்லூரி ஆரம்பித்த காலம் தொடக்கம் விளையாட்டு மைதானம் ஒன்று பாடசாலைக்கு இல்லாத காரணத்தினால் மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் இது விடயம் தொடர்பாக அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனத்திலெடுத்து விளையாட்டு மைதானத்தை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இக்கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.