வவுனியாவில் கடும் பனிமூட்டம் : இயல்புநிலை பாதிப்பு!!

800

 

கடும் பனிமூட்டம்

வவுனியாவில் கடந்த சில நாட்களாக காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காணப்படுவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

காலை எட்டு மணியை கடந்தும் வவுனியாவில் உள்ள பிரதேசங்களில் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகின்றது.

அத்துடன் கடுமையான பனிப் பொழிவு காரணமாக வீதிகளில் வாகனத்தை செலுத்தும் வாகன சாரதிகள்பெரும் இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். மக்களது நடமாட்டமும் வீதிகளில் காலைவேளையில் குறைவாகவே காணப்படுகின்றது.