வவுனியாவில் நல் நிலைக்கான விழிப்புணர்வு நடைபயணம்!!

909

விழிப்புணர்வு நடைபயணம்

குடும்ப புனர்வாழ்வு நிலையத்தால் நல் நிலைக்கான பயணம் எனும் தொனிபொருளில் விழிப்புணர்வு நடைபயணம் ஒன்று வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் ஆரம்பிக்கபட்டது.

இப் பயணமானது வவுனியாவில் இருந்து முல்லைத்தீவு வரையுள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களை கடந்துசென்று எமது சமூக மத்தியில் உள்ள ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கிலும் குறித்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த நடைபயணம் இன்று காலை 9.30 மணியளவில் வவுனியா மாவட்ட செயலகம் முன்பாக ஆரம்பமாகி 26 ம் திகதி மாலை 3 மணியளவில் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் நிறைவடையவுள்ளது.

குறித்த ஆரம்பநிகழ்வில் அரசஅதிபர் எம்.ஹனீபா, குடும்ப புனர்வாழ்வு நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் லகிரு பெரேரா, சுகாதார வைத்திய அதிகாரி லவன், பிரதேச செயலர் கா.உதயராஜா, அரச அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.