வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க.பாடசாலையின் மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி!!

567

வவுனியா காத்தார்சின்னக்குளம் அ.த.க பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்று முன்தினம் காலை 9.30 மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர் சு.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் முதன்மை விருந்தினராக காத்தார்சின்னக்குளம் கிராம அலுவலர் க.தர்சன் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக பிரதேசசபை உறுப்பினர் யோகராசா, கெளரவ விருந்தினர்களாக சமாதான நீதவான் ந.ரவீந்திரன், கங்கேஸ்வரி முன்பள்ளி ஆசிரியை திருமதி டட்லி, சமூக சேவையாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

மிகவும் பழமைவாய்ந்த இப் பாடசாலை இவ் வருடம் 60 வது ஆண்டு விழாவை கொண்டாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.