வவுனியாவில் நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக பெண்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாகின்றனர் : நகரசபை பெண் உறுப்பினர்!!

875

நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடு காரணமாக குடும்ப பெண்கள் பெரும் அவஸ்தைக்கு உள்ளாவதாக வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா ஜெபராணி தெரிவித்துள்ளார்.

வவுனியா நகரசபையின் பதினொராவது அமர்வு நகரசபையின் தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் நேற்று நடைபெற்றபோதே சபையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த நகரசபை பெண் உறுப்பினர், சிறு கடன்களை குடும்பப் பெண்களுக்கு கண்மூடித்தனமாக வழங்கியுள்ள நிதி நிறுவனங்கள் கடனை மீள் செலுத்த தகுதியுடையவர்களிடம் மாத்திரம் அறவிடுமாறும் சபையில் முன்மொழிவதாக தெரிவித்த நகரசபை உறுப்பினர்,

சிறு கடனை பெற்று செலுத்த முடியாத குடும்பப் பெண்களுக்கு அரசாங்கத்தால் ஒரு இலட்சம் ரூபா பணம் மானியமாக வழங்கப்படுவதாக அறிவித்த திட்டம் இருக்கின்ற போதிலும் வங்கிகள் அப்பணத்தை கொடுக்க மறுப்பதாக பெண் நகரசபை உறுப்பினர் குற்றஞ்சாட்டினார்.

அரசாங்க அதிபருடன் நகரசபையினர் கலந்துரையாடி வங்கிகளை ஒன்றிணைத்து பெண்களின் கடன் பிரச்சனைக்கு தீர்வினை காண வேண்டும் என தெரிவித்தார்.