பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சி. ஸ்ரீதரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ப.சத்தியலிங்கம், வவுனியா வடக்கு பிரதேசசபையின் தவிசாளர் இ.தணிகாசலம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவினர் இன்றயதினம் நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாரி மலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
காலை எழுமணியளவில் வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு சென்ற அவர்கள், ஆலயத்தின் பூசகர் மற்றும் அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி இருந்ததுடன் பூஜை நிகழ்வுகளிலும் கலந்துகொண்டிருந்தனர்.
அதன்பின்னர் புதிதாக மக்கள் மீள்குடியேறிய பகுதியான காஞ்சூர மோட்டைக்குசென்றதுடன் அங்குள்ள மக்களின் குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டனர்.











