வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக ஸ்ரீகரன் கேசவன் தெரிவு!!

1202

 

வவுனியா பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று முன்தினம் (09.03.2019) காலை 10 மணிக்கு மாவட்ட சம்மேளனத்தின் தலைவர் ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

புதிய நிர்வாகத் தெரிவில் சம்மேளனத்தின் 2019/2020 ஆம் ஆண்டிற்கான தலைவராக தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் தலைவரும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினரும் ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் மாணவனுமான ஸ்ரீகரன் கேசவன் பிரதேச இளைஞர்களால் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் செயலாளர் கெர்சோன் கரிஸ் சம்மேளனத்தின் ஊடகப் பிரிவிற்கான செயலாளராக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இச் சம்மேளனத்தின் பொதுக் கூட்டத்திற்கான பிரதம அதிதிகளாக வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வவுனியா நகர சபையின் உறுப்பினரும் ஆசிரியருமான சுந்தரலிங்கம் காண்டீபன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்ஷினி சஜீவன், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஐ.சுஹானி, வவுனியா இளைஞர் சேவை அதிகாரி தே.அமுதராஜ், வவுனியா பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் விந்துஜன் ஆகியோருடன் சென் யூடி பணிப்பாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.