வவுனியா, போகஸ்வெவ பகுதியில் இருந்து ரி 56 ரக துப்பாக்கிக்கான 750 ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போகஸ்வெவ பகுதியில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அண்மையில் அலுவலக பணியாளர்கள் சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து போகஸ்வெவ பகுதியில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட பின் குறித்த ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை போகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





