4 பேர் 9A சித்தி

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டிருந்தது. வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். இதன்படி சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு.

ராஜ்குமார் சுலோஜன் 9A, துஷானிக்கா விஜயகுமார் 9A, நிகாருன்யா திருமூர்த்தி 9A , டில்சியா திலீப்குமார் 9A அத்துடன் யாவேஸ்ட்டா ஏழுமலை 8AC, வத்ஷனா ராஜரட்ணம் 7A2B, கலையருவி சுதாகரன் 7A2B, டினோசிகா ராமர் 7A2C ஆகிய மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை பரிட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில் 106 மாணவர்கள் கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். விகிதாசார அடிப்படையில் 75வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும் வவுனியா மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் அனைவருக்கும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் பெருமையடைகின்றோம்.




