வவுனியா கைத்தொழில்பேட்டைக்கு பிரதி அமைச்சர் விஜயம்!!

1236

புத்திக பத்திரன

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு இன்று (30.03) காலை 9 மணியளவில் சிறுகைத்தொழில் மற்றும் வாணிபத்துறை பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நிலையத்தினை பார்வையிட்டு கைத்தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

வவுனியா பூந்தோட்டத்தில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு முதன் முறையாக மேற்கொண்ட விஜயத்தின் போது கைத்தொழிலாளர்கள் பிரதி அமைச்சரை வரவேற்று அழைத்துச் சென்றதுடன் கைத்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் உட்பட அவர்களின் தேவைகள், கைத்தொழில் பேட்டை நிலையத்தின் தேவைகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் வீதி அமைத்தல், மின்விளக்கு அமைத்தல், போன்ற விடயங்களை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.

அனைத்து விடயங்களையும் கேட்டறிந்த அமைச்சர் அமைச்சினால் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்களை கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சர் ரிஷாட் பதியூதீனுடன் இணைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கைத்தொழில் சிறு கைத்தொழிலாளர்களிடம் உரிமையாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில் கைத்தொழில்பேட்டையின் ஒன்றியத் தலைவரும் வவுனியா வர்த்தகர் சங்கத்தலைவருமான எஸ்.சுஜன், அமைப்பின் செயலாளர் பரமேஸ்வரன், பணிப்பாளர் பி.கே.லியனகே முகாமையாளர் சடாச்சரம், மற்றும் சிறு கைத்தொழில் உரிமையாளர்கள் ஊழியர்கள், மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள், எனப்பலரும் கலந்துகொண்டனர்.