வவுனியாவில் கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கல்!!

649

 

வீடமைப்பு நிர்மானத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் கட்டுமான கைத்தொழில் கைவிளைஞர்களுக்கான தகுதி அடிப்படையிலான பயிற்சித்திட்டத்தினை பூர்த்திசெய்த கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் வீ.எம்.வீ.குறூஸ் தலைமையில் இன்று (30.03.2019) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் சீ.ஐ.டீ.ஏ (CIDA) உதவிப்பணிப்பாளர் சரத் வனசிங்க , NAITA மாவட்ட முகாமையாளர் பவளநாதன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மேலதிக மாவட்ட முகாமையாளர் நிமலநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் பி.ஏ.கருணாதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் உத்தியோகத்தர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சுமார் 200 கட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.