வவுனியாவில் மரணித்த பெண்ணுக்கு கொரனா தொற்று இல்லை!!

813

வவுனியாவில்..

வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணித்த பெண்ணுக்கு கொரனா தொற்று இல்லை என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, கற்குழியைச் சேர்ந்த அருட்செல்வன் கலாராணி (வயது 56) என்ற குடும்ப பெண் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் குறித்த பெண்ணுக்கு மருத்துவர்கள் தனிமைப்படுத்தி சிகிச்சையளித்த போதும் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரனா தொற்று உள்ளதா என்ற சந்தேகத்தில் அவருடைய இரத்த மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த மருத்துவர்கள் குறித்த பெண்ணுக்குகொரனா தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.