களத்தில் பொலிஸார் மற்றும் படையினர்..

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை காப்பாற்றும் நோக்கில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தம் செய்யும் விசேட நடவடிக்கை வவுனியா பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் ஆகியோரினால் இன்று (05.04.2020) காலை முன்னெடுக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளை சுத்தப்படுத்தி கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களை காப்பற்றும் நோக்கில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர், 563 மற்றும் 681 ஆகிய இராணுவ படைப்பிரிவினர், வவுனியா பொலிஸார் களத்தில் இறங்கியுள்ளனர்.

வவுனியா நகரசபை தீயணைப்பு பிரிவினர் மற்றும் வவுனியா பொதுச்சுகாதார பரிசோதகர்கள் ஆகியோருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட இச் செயற்றிட்டம் வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய இன்று காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

வவுனியா கண்டி வீதி, புகையிரத நிலைய வீதி, பழைய பேருந்து நிலையம், முதலாம் குருக்குத்தெரு, இரண்டாம் குருக்குத்தெரு, ஏ9 வீதி போன்ற என்பவற்றை சுத்தப்படுத்தும் பணியில் மடுக்கந்தை விசேட அதிரடிப்படையினர் , 563 மற்றும் 681 ஆகிய இராணுவ படைப்பிரிவினர் , வவுனியா பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.





