வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய நால்வர் கைது : மூன்று மோட்டர் சைக்கிள்கள் பறிமுதல்!!

584

நால்வர் கைது..

புத்தாண்டு தினத்தில் ஊரங்கு சட்டத்தை மீறி செயல்பட்ட நால்வர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த மூன்று மோட்டர் சைக்கிள்களும் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

கொரனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதுவருடத்தை முன்னிட்டு நேற்று மாலை (13.04) 6 மணி தொடக்கம் இன்று (14.03) மாலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் மேலும் இறுக்கமாக்கப்பட்டு பொலிசார் மற்றும் இராணுவத்தினர் தீவிர சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் ஊரடங்கு சட்டத்தை மீறி வவுனியா நகர் பகுதியில் நேற்று இரவு (13.04) இரு மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

இன்று (14.04) காலை ஊரடங்கு சட்டத்தை மீறி ஒரு மோட்டர் சைக்கிளில் பயணித்த இருவரும் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த 3 மோட்டர் சைக்கிள்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 47, 29, 26, 25 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.