வவுனியாவில் ம துபான சாலைகளுக்கு முன்னால் நீண்ட வரிசையில் குடிமக்கள்!!

650

நீண்ட வரிசையில்..

வவுனியாவில் ம துபானசாலைகளுக்கு முன்னால் ம துப்போத்தல்களைப் வாங்குவதற்காக காலை முதலே நீண்ட வரிசையில் மக்கள் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.

வவுனியா உள்ளிட்ட 18 மாவட்டங்களின் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நீக்கப்பட்டுள்ளது.

கொரனா தீவிரமடைந்ததையடுத்து கடந்த மாதம் 20 ஆம் திகதி பூட்டப்பட்ட ம துபானசாலைகள் ஒரு மாதத்தின் பின் இன்றைய தினமே மீள திறக்கப்பட்டன.

இந்நிலையில் ம துபானப் போத்தல்களை வாங்குவதற்காக அதிகளவிலான இளைஞர்களும், முதியவர்களும் நீண்ட வரிசையில் காவல் நின்று பெற்றுக் கொண்டனர்.

குறித்த ம துபான சாலைகளுக்கு முன்னால் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், அவர்கள் வரிசையில் நின்றவர்களை சமூக இடைவெளிகளை பேணுமாறும் மாஸ்க் அணியுமாறும் வலியுறுத்தியிருந்தனர்.