வவுனியாவில் கடும் காற்றுடன் மழை : வீடுகள் சேதம்!!

885

கடும் காற்றுடன் மழை..

வவுனியாவில் கடும் காற்றுடன் திடீரென பெய்த மழை காரணமாக வீடுகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் வவுனியாவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணிநேரம் குறித்த மழையானது நீடித்தது.

இதன்போது வீசிய கடும் காற்றினால் வைரவபுளியங்குளம் பகுதியில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு வர்த்தக நிலையம் என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீரும் உட்புகுந்துள்ளது.

குறிப்பாக ஸ்ரீலங்கா ரெலிகொமிற்கு சொந்தமான உத்தியோகத்தர் விடுதி ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டு மழை நீரில் உட்புகுந்தமையால் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. வீட்டு வளவில் இருந்த வாழை முதலிய பயன்தரு மரங்களும் முறிந்து வீழ்ந்துள்னளன.