வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தால் வெறிசோடிய நகரம் : பாதுகாப்புக் கடமையில் பொலிசார்!!

659

ஊரடங்கு சட்டத்தால்..

வவுனியாவில் ஊரடங்கு சட்டத்தால் வீதிகள், நகரங்கள் வெறிச் சோடிக் காணப்படுவதுடன் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 5.00 மணியில் இருந்து இரவு 8.00 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்த நிலையில் நேற்று (24.04.2020) இரவு 8.00 மணி முதல் திங்கட்கிழமை (27.04.2020) காலை 5.00 மணிவரை ஊரடங்கு மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியாவில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், வீதிகள், நகரம் என்பவற்றில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், அநாவசியமான முறையில் வீதிகளில் செல்வோரை மறித்து பொலிசார் எச்சரித்து திருப்பி அனுப்புவதையும் அவதானிக்க முடிகிறது.