வவுனியா ஆசிரியர்கள் கறுப்புப் பட்டியணிந்து போராட்டம்..!

731

teacherவவுனியா மாவட்ட ஆசிரியர்கள் இன்று கறுப்பு பட்டியணிந்து கடமைக்கு சென்றனர்.

வவுனியாவில் கற்பித்த ஆசிரியரான கார்த்திகேசுநிரூபன் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பகுதியில் எழும்புக்கூடாக மீட்கப்பட்டமையை கண்டித்தே இந்த போராட்டம் நடைபெற்றது.

இலங்கை ஆசிரியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப் போராட்டத்தில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை ஆசிரியர்கள் உடைகளில் கறுப்பு நிறத்திலான பட்டிகளையும், துணிகளையும் அணிந்து தமது கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் அதிகளவான பாடசாலைகளில் இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டிருந்ததுடன் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படையாத வகையில் கற்பித்தல் செயற்பாட்டையும் மேற்கொண்டிருந்தனர்.