விபத்து..
புதல்வியின் பதிவுத்திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி கயஸ் ரக வாகனத்தில் சென்றவர்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வவுனியா தோணிக்கல் பகுதியினை சேர்ந்த இவர்கள் நேற்றிரவு (17.11.2021) வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்துள்ளனர். இதன் போது கல்கமுவ பகுதியில்,
இன்று (18.11.2021) அதிகாலை குறித்த கயஸ் ரக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கனரக வாகனத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் கயஸ் ரக வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட ஒரே குடும்பத்தினை சேர்ந்த அறுவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குள்ளான இரு வாகனங்களும் கல்கமுவ பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.