வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா-2022!!

2103

நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் விழா..

வவுனியா பூந்தோட்டம் அருள்மிகு ஸ்ரீ லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலய வருடாந்த பொங்கல் இன்று (02.07.2022) சனிக்கிழமை நடைபெற்று வருகின்றது.

பகல் நிகழ்வுகளாக பறவைக் காவடிகள், செடில் காவடிகள், பால்க்காவடிகள், பால்ச்செம்பு, தீச்சட்டி, கரகாட்டம் என்பன காலை 10 மணியளவில் வவுனியா சிந்தாமணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி வவுனியா நகர வீதிவழியாக பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தினை வந்தடைந்தது.

இரவு கலை நிகழ்ச்சிகளும், திருகோணமலை டொமினிக் பிரகாஸ்சின் நியூ வேவ்ஸ்(New Waves) இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளதுடன், இரவு பூசைகள், பொங்கல் நிகழ்வுகல் என்பனவும் இடம்பெறவுள்ளது.

நாளை ஞயிற்றுக்கிழமை காலை அதிஸ்டலாபச்சீட்டு அதிஸ்டம் பார்க்கப்படும், அதனைதொடர்ந்து ஆடு, மாடு, கோழி என்பன ஏலமிடும் நிகழ்வும் இடம்பெறும்.