வவுனியாவில் புகையிரதம் மோதி ஒருவர் மரணம்!!

4102

வவுனியாவில் புகையிரதம் மோதியதில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கி நேற்று (17.03) மாலை சென்ற கடுகதிப் புகையிரதம் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் பயணித்த போது புகையிரதக் கடவைக்குள் நுழைந்த ஒருவருடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஜெயக்கொடி ஆராச்சி ராஜரட்ண என்பவரே மரணமடைந்தவராவார். சடலம் வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மரணம் தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.