வவுனியாவில் சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பிய பெண் கைது!!

3587

சமூக வலைத்தளங்களில் நபர் ஒருவருக்கு எதிராக அபகீர்த்தி ஏற்ப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம்(19.11.2024) இடம்பெற்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வெளிநாடொன்றில் வசிக்கும் குறித்த பெண் அண்மையில் நாட்டிற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் வவுனியாவை சேர்ந்த நபர் ஒருவருடன் இருந்த முரன்பாட்டையடுத்து சமூக வலைத்தளத்தில் கானொளிகள் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக குறித்த நபர் தனது பெயருக்கு அபகீர்த்தியை ஏற்ப்படுத்தியதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட பெண் வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.