வவுனியா ஒமந்தையில் விசேட நடவடிக்கை : ஒரு பெண் உட்பட ஐவர் கைது!!

2270

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திறந்த பிடியானையின் கீழ் ஒருவரையும் திகதியிடப்பட்ட பிடியானையின் கீழ் நால்வர் என ஜவரை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளமையுடன்,

அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.