வவுனியாவில் ஒரு பெரல் கசிப்புடன் ஒருவர் கைது!!

1542

வவுனியா பூவரசங்குளம் பொலிசார் ஒரு பெரல் கசிப்புடன் நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக தெரிவித்தனர்.

பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாலிக்குளம் குளப்பகுதியில் வைத்து குறித்தநபர் நேற்று.(07.05.2025) கைதுசெய்யப்பட்டார்.

அவரிடமிருந்து 90லீற்றர் அளவுகொண்ட ஒரு பெரல் கசிப்பு மீட்கப்பட்டது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்றப்படுத்த உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.