வவுனியா ஓமந்தையில் திருவள்ளுவர் சிலை திறந்து வைக்கப்பட்டது!!

1700

வவுனியா ஓமந்தை கிராம அலுவலர் வளாகத்திற்குள் திருவள்ளுவர் சிலை இன்று (04.06.2025) திறந்துவைக்கப்பட்டது.

கிராம அலுவலர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட வவுனியா பிரதேச செயலாளர் இ.பிரதாபன் சிலையை திறந்துவைத்தார்.

நிகழ்வில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலஷண்குகன், தெற்கு பிரதேசசபையின் செயலாளர் சு.தெர்ஜனா, அதிபர், பாடசாலை மாணவர்கள், உட்பட பலர் கலந்துகொண்டனர்.