தொடர் சரிவில் அமெரிக்க டொலர் : அமைச்சர் வெளியிட்ட நம்பிக்கை!!

16

எதிர்வரும் நாட்களில் அமெரிக்க டொலரின் பெறுமதி மேலும் சரியக் கூடும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வொன்றில் கலந்து கொண்டு போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் மேலும் சரியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டமும் சந்தையை நிலைப்படுத்த உதவும்.

சமீபத்திய நாணய மாற்று விகித ஏற்ற இறக்கங்கள் குறித்த எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் விமர்சனங்களை சந்தர்ப்பவாதம் கொண்டவை.

டொலர் 340 ரூபாவைத் தாண்டியபோது சிலர் கொண்டாடினார்கள். ஆனால் அமெரிக்க டொலர் ஏற்கனவே மீண்டும் சரியத் தொடங்கி, சுமார் 334 ரூபாவாகக் குறைந்துவிட்டது. வரும் வாரங்களில் இந்த விகிதம் மேலும் குறையும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை எதிர்பார்க்கிறது. அது கிடைத்தவுடன் நாட்டின் அந்நியச் செலாவணி நிலையை மேலும் வலுப்படுத்தும்.

நாணய நிலவரம் குறித்து பீதியை உருவாக்க எதிர்க்கட்சி பிரமுகர்கள் முயற்சிக்கிறனர். ஆனால் பொதுமக்கள் மத்தியில் அவர்களின் கருத்துக்கள் எடுபடாது.

அரசாங்கத்தின் பொருளாதாரத் திட்டம் வெற்றிகரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனை நாட்டு மக்களும் நன்றாக அறிவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.