
இலங்கையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் நடைமுறை மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் ஆலோசனை நடத்தி வருவதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய, வெகுவிரைவில் இந்த நடைமுறை அமுலுக்கு வரும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாக பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிபொருளுக்காக மாதத்திற்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட நேரிடுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட காலப்பகுதி முதல் தற்போது வரையில் பல மில்லியன் டொலர் எரிபொருளுக்காக செலவிடப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதுடன், பல நாடுகளில் வீட்டில் இருந்து பணியாற்றும் செயற்பாடு நடைமுறைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




