
இலங்கையில் திருமணமான பெண்களில் 10.6 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை எனத் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மக்கள் தொகை மற்றும் வீடமைப்புத் கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள திருமணமான பெண்களில் பெரும்பான்மையானோர் அதாவது 33.3 சதவீதமானோர் தங்களது வாழ்நாளில் இரு குழந்தைகளை மாத்திரமே பிரசவித்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

அத்துடன் பொருந்தோட்டங்களில் வாழும் பெண்களைக் கருத்தில் கொள்ளும்போது அவர்களில் அதிக சதவீதமானோர் மூன்று குழந்தைகளைப் பிரசவித்துள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் திருமணமான பெண்களில் 12.4 சதவீதமானோருக்குக் குழந்தைகள் இல்லை என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
திருமணமான பெண்களில் ஒரேயொரு குழந்தையை மாத்திரம் பிரசவித்துள்ள பெண்களின் அதிகூடிய சதவீதம் நகர்ப்புறங்களிலிருந்தே பதிவாகியுள்ளதுடன் அந்த எண்ணிக்கை 21.3 சதவீதமாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ளது.




