வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு!!

1290

Rape

வவுனியாவில் 10 வயது சிறுமி ஒருவர் மீது துஸ்பிரயோக முயற்சி மேற்கொள்ள முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம் முயற்சியில் ஈடுபட்ட குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி ஒருவரை அழைத்து அயல்வீட்டு 42 வயது குடும்பஸ்தர் ஒருவர் துஸ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சி மேற்கொண்ட போது சிறுமி கதறிக் கொண்டு தப்பியோடியதை அடுத்து சிறுமியின் வீட்டுக்கு தகவல் தெரிந்தமையால் துஸ்பிரயோக முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வவுனியா பொலிசில் நேற்று சனிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ள அதேவேளை, சந்தேகநபரான 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகிறது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியாவில் கடந்த 3 வாரங்களில் இடம்பெறும் 5வது சம்பவம் இதுவாகும்..

1. உக்குளாங்குளத்தில் கடந்த மாதம் 16ம் திகதி ஹரிஷ்ணவி என்ற மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

2. கனகராயன்குளத்தில் 5 வயதுச் சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்.

3. தரணிக்குளம் பகுதியில் 11 வயதுச் சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்த இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.

4. புதுக்குளம் பகுதியில் 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்ததுடன் அதற்குக் காரணமான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்

5. கணேசபுரம் பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமி மீது 42 வயது குடும்பஸ்தர் துஸ்பிரயோக முயற்சியை மேற்கொண்டுள்ளார்.

வவுனியாவில் தொடர்ச்சியாக சிறுவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைகளால் வவுனியா மக்கள் ஒருவித பதற்றத்துடன் வாழவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர்புபட்ட செய்திகள்

வவுனியா உக்குளாங்குளம் சிறுமியின் மரணம் கொலையே : விபரம் இணைப்பு!!

வவுனியாவில் 11வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் : இரு சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்!!

வவுனியாவில் ஆண் குழந்தையை பிரசவித்த 15வயது பாடசாலை மாணவி!!

வவுனியாவில் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோக முயற்சி : 42 வயது குடும்பஸ்தர் தலைமறைவு!!